பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 12:6-13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

6. அவர்களைக் கர்த்தரின் தாசனாகிய மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தார்கள்; அத்தேசத்தைக் கர்த்தரின் தாசனாகிய மோசே ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகக் கொடுத்தான்.

7. யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத் முதற்கொண்டு சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைமட்டும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த புறங்களிலும் வனாந்தரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,

8. யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தவர்களுமான ராஜாக்கள் யாரெனில்:

9. எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயியின் ராஜா ஒன்று,

10. எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,

11. யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,

12. எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,

13. தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 12