பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 10:29-33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

29. கணவாயைத் தாண்டி, கேபாவிலே பாளயமிறங்குகிறார்கள்; ராமா அதிர்கிறது; சவுலின் ஊராகிய கிபியா ஓடிப்போகிறது.

30. காலீம் குமாரத்தியே, உரத்த சத்தமாய்க் கூப்பிடு; ஏழை ஆனதோத்தே, லாயீஷ் ஊர்மட்டும் எட்ட சத்தமிட்டுக் கூப்பிடு.

31. மத்மேனா வலசைவாங்கிப்போகும், கேபிமின் குடிகள் தப்பிஓடக் கூட்டங்கூடுகிறார்கள்.

32. இனி ஒருநாள் நோபிலே தங்கி, சீயோன் குமாரத்தியின் பர்வதத்துக்கும், எருசலேமின் மேட்டுக்கும் விரோதமாய்க் கைநீட்டி மிரட்டுவான்.

33. இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாய் வெட்டுவார்; ஓங்கி வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 10