பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 14:8-21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

8. பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத்தொடாமலும் இருப்பீர்களாக.

9. ஜலத்திலிருக்கிற எல்லாவற்றிலும் சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.

10. சிறகும் செதிளும் இல்லாத யாதொன்றையும் புசிக்கலாகாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக.

11. சுத்தமான சகல பட்சிகளையும் நீங்கள் புசிக்கலாம்.

12. நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,

13. பைரியும், வல்லூறும், சகலவித பருந்தும்,

14. சகலவித காகங்களும்,

15. தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவிதமான டேகையும்,

16. ஆந்தையும், கோட்டானும், நாரையும்,

17. கூழக்கடாவும், குருகும், நீர்க்காகமும்,

18. கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலுமே.

19. பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகள் புசிக்கத்தகாதவைகள்.

20. சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் புசிக்கலாம்.

21. தானாய் இறந்து போனதொன்றையும் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக்கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 14